இதில் 2 பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அதன்படி இன்று காலை நடந்த முதல் போட்டியில், பாகலர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாராசின் 25 வயது அரினா சபலென்கா, 8ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் 28 வயது மரியா சக்கரி மோதினர். இதில் 6-0,6-1 என எளிதாக அரினா சபலென்கா வெற்றிபெற்றார். தொடர்ந்து அதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் 4ம் ரேங்க் கஜகஸ்தானின் 24வயது எலெனா ரைபகினா-5வது ரேங்க் அமெரிக்காவின் 29 வயது ஜெசிகா பெகுலா மோதினர். இதில் 75-6-2 என ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
The post டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: சபலென்கா, ஜெசிகா பெகுலா வெற்றி appeared first on Dinakaran.