இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயநாடு மாவட்டம் கம்பமலை பகுதியில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் அடிக்கடி வந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 8 காவல் நிலையங்களை தகர்க்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள வளயம், குற்றியாடி, தொட்டில்பாலம், பெருவண்ணாமூழி, கூராச்சுண்டு, தாமரசேரி, திருவம்பாடி மற்றும் கோட்டசேரி ஆகிய காவல் நிலையங்களை மாவோயிஸ்டுகள் தகர்க்க கூடும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த காவல் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள வனப்பகுதிக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதி வழியாக எளிதில் மாவோயிஸ்டுகள் வர வாய்ப்புள்ளது. எனவே இங்குள்ள வனப்பகுதியில் சோதனையை தீவிரப்படுத்த கேரள அதிரடிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.
The post கேரளாவில் 8 காவல் நிலையங்களை தகர்க்க மாவோயிஸ்டுகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.