அதேபோல நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த ரவுடிகள் செந்தில்குமார் முத்துக்குமார், அரக்கோணம் மோகன், நவீன், போஸ், சுரேஷ், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த ரவுடி எட்வின் உள்ளிட்டோர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 11 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த அதிமுக 111வது வட்டச் செயலாளர் சுதாகர் மற்றொரு அதிமுக நிர்வாகி ஜான் கென்னடி ஆகிய இருவருக்கும் ஆற்காடு சுரேஷ் வழக்கில் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கிழக்கு கடற்கரை சாலை பகுதி பங்களாவில் பதுங்கி இருந்தவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் ஜான் கென்னடி பிரபல ரவுடியாக இருந்துள்ளார். பின்னர் நன்னடத்தையின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ரவுடி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜான் கென்னடி தான் ரவுடி ஆற்காடு சுரேசை கொலை செய்ய நெல்லையிலிருந்து கூலிப்படையை வரவழைத்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அரக்கோணம் ஜெயபால் தற்போது கைதான அதிமுக நிர்வாகிகள் இருவருக்கும் நெருங்கிய உறவினர் என போலீசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட 2 அதிமுக நிர்வாகிகளை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணைக்கு பிறகு தான் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என கூறப்படும் பாம் சரவணன் குறித்த தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரம் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் நேற்று வரை 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் ஆற்காடு சுரேஷ் கொலையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
The post சென்னை ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 2 அதிமுக நிர்வாகிகள் கைது: 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.