கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

 

கோவை, ஆக. 23: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் சத்தியவாணிமுத்து அம்மையர் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் மகளிர் ஊர்நல அலுவலர், சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் நேரடியாக விண்ணப்பம் செய்யாமல், இ-சேவை மையங்களில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கு 6 மாத கால தையற்பயிற்சி முடித்த 20 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இ-சேவை மூலம் விண்ணப்பிக்கும் போது வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, தையற்பயிற்சி முடித்த சான்று, சாதிச்சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.