உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் சுற்று 35வது நகர்த்தலுக்குப் பிறகு டிராவில் முடிந்தது

பெக்கு: உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் சுற்று 35வது நகர்த்தலுக்குப் பிறகு டிராவில் முடிந்தது. கார்ல்சன் பிரக்ஞானந்தா மோதிய இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. முதல் சுற்று டிராவில் முடிந்த நிலையில் நாளை இரண்டாம் சுற்று போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தால் டைபிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இன்று வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார். நிஜத் அபசோவ்-ஃபேபியானோ காருவானா மோதிய 3-வது இடத்துக்கான போட்டியின் முதல் சுற்றில் அபசோவ் வெற்றி பெற்றனர்.

 

 

 

The post உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் சுற்று 35வது நகர்த்தலுக்குப் பிறகு டிராவில் முடிந்தது appeared first on Dinakaran.

Related Stories: