பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு திமுக சார்பில் துரைமுருகன் கடிதம்..!!

சென்னை: பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு திமுக சார்பில் துரைமுருகன் கடிதம் அனுப்பியுள்ளார். பொது சிவில் சட்டமே நிறைவேற்றக் கூடாது என்பதுதான் திமுகவின் தீர்க்கமான கொள்கை பிரகடனம் எனவும் அவர் தெரிவித்தார். வேற்றுமையில் ஒற்றுமை என உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு நமது இந்திய நாடு எனவும் கூறினார். பொது சிவில் சட்டத்துக்கு 22வது சட்ட ஆணையம் அனுமதி வழங்கக் கூடாது எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

The post பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு திமுக சார்பில் துரைமுருகன் கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: