சூலூர் சமத்துவ மயானத்திற்கு குடிநீர் இணைப்பு போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க திட்டம்

 

கோவை, ஜூலை 7: கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் போதை தடுப்பு மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், 18 வயதிற்குட்பட்ட போதை பழக்கம் உள்ள சிறார்களுக்கு கவுன்சிலிங், சிகிச்சை, மறு வாழ்வுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படும். சென்னை, திருச்சியிலும் இதுபோன்ற போதை தடுப்பு மையம் துவக்கப்படவுள்ளது. கோவையில் அமைக்கப்படும் மையத்திற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

18 வயதிற்குட்பட்ட சிறார் சிலர் கஞ்சா, மது, போதை மாத்திரை பழக்கத்தில் இருப்பதாக புகார் கிடைத்துள்ளது. சிலர் போதை பழக்கத்தினால் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி கொண்டிருக்கிறார்கள். பள்ளி இடை நின்ற மாணவர்கள் குறித்த ஆய்வின் போது சில மாணவர்கள் போதை பழக்கத்தால் பள்ளி செல்லாமல் இருக்கும் தகவல் கிடைத்தது.

பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு போலீசாரால் நடவடிக்கை்கு ஆளான சிறார்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது சிலர் போதை பழக்கத்தினால் குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த போதை தடுப்பு மையத்தில் சிறார்களுக்கு உரிய சிகிச்சை ஆலோசனை வழங்கி அவர்களுக்கு மறு வாழ்வு வழங்க முடியும் என சமூக நலத்துறையினர் தெரிவித்தனர்.

The post சூலூர் சமத்துவ மயானத்திற்கு குடிநீர் இணைப்பு போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.