கிரைம் செய்திகள் மரத்தில் ஏறியவர் தவறி விழுந்தவர் சாவு

கோவை, ஜூன் 19: கோவை துடியலூர் முத்துநகரை சேர்ந்தவர் பூபாலன். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டார். அப்போது அங்கே வந்த வாலிபர் இவரது வீட்டு முன்பு இருந்த தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை கீழே இறங்கி வருமாறு சத்தம் போட்டனர். இதில் அந்த நபர் நிலைதடுமாறி சுமார் 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை, கை, கால்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும் என தெரிகிறது. இவரை பற்றிய மற்ற விவரங்கள் தெரியவில்லை. துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கிரைம் செய்திகள் மரத்தில் ஏறியவர் தவறி விழுந்தவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.