திருவள்ளூர் பெரியகுப்பத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. திருவள்ளூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 6ம் தேதி காலை 11 மணியளவில் திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சுனில் குமார், தலைமை தாங்கி மின்நுகர்வோரிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு தீர்வுகாண உள்ளார். எனவே, திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்மந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம் என திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.கனகராஜன் தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளூர் பெரியகுப்பத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: