புளுதியூர் சந்தையில் ₹37 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

அரூர் : புளுதியூர் வாரச்சந்தையில் ₹37 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது. அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், கால்டைகனை வாங்க வருகின்றனர்.நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடு ₹8,200 முதல் ₹39,000 வரையும், ஆடுகள் ₹6,100 முதல் ரூ.10,200 வரை விற்பனையானது. நேற்றைய சந்தையில் ₹37 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post புளுதியூர் சந்தையில் ₹37 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: