எச்.எம்.எஸ் புதிய நிர்வாகிகள் தேர்வு தலைவராக டி.எஸ்.ராஜாமணி 14-வது முறையாக பதவிஏற்பு

கோவை: கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க (எச்.எம்.எஸ்) மகாசபை கூட்டம் சிங்காநல்லூர் தியாகி என்ஜிஆர் மஹாலில் நேற்று நடந்தது. சங்க தலைவர் டி.எஸ்.ராஜாமணி தலைமை தாங்கினார். இதில், கடந்த 18.05.2020 முதல் சட்ட விரோதமாக முடக்கி வைத்துள்ள என்.டி.சி ஆலைகளை திறக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையொட்டி, 2023-2025-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், சங்க தலைவராக டி.எஸ்.ராஜாமணி 14-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். பொருளாளர் ஜி.மனோகரனுக்கு கூடுதல் பொறுப்பாக செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும், செயலாளர்களாக கே.கண்ணன், எம்.அப்புக்குட்டி, எஸ்.தேவராஜன், கே.மோகன்ராஜ், துணை தலைவர்களாக சி.சண்முகம், பி.டி.மோகன்ராஜ், கே.கந்தசாமி, ஆர்.தங்கவேலு, ஆர்.ஏ.ஜேசுராஜ், உதவி செயலாளர்களாக வி.கே.தங்கராஜ், எஸ்.ஆர்.சண்முகம், சிறப்பு செயலாளர்களாக சி.மருதாசலம், பி.கோவிந்தராஜூலு, கே.பழனிசாமி, ஆர்.பத்மநாபன், எஸ்.ஸ்ரீராம், தென்றல் நாகராஜ், என்.வி.செல்வராஜ், என்.நாகராஜ், ஏ.ராஜன், எம்.பாலகுருசாமி, உடுமலை ஜி.சுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதுதவிர, நிர்வாக குழு உறுப்பினர்களாக கே.முரளிதரன், வி.ரமணகுமார், எஸ்.லோகநாதன், டி.ராஜ்குமார், எஸ்.ஸ்ரீராம், ஜி.ராமதாஸ், வி.ராஜ், எம்.கணேசன், எம்.ரவி, ஆர்.கோபால், ஜி.துரைராதாகிருஷ்ணன், ஜி.ேஜாதிமணி, வி.கோவிந்தராஜ், எஸ்.கருப்புசாமி, எம்.கதிரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

The post எச்.எம்.எஸ் புதிய நிர்வாகிகள் தேர்வு தலைவராக டி.எஸ்.ராஜாமணி 14-வது முறையாக பதவிஏற்பு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.