ஐஏஎஸ், ஐபிஎஸ் இடைநீக்கம் ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: அனைத்திந்திய சேவைகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ், ஒன்றிய ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், ‘கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரி ஒருவர் 48 மணி நேரத்திற்கு மேல் தடுப்பு காவல் அல்லது காவலில் வைக்கப்பட்டால் அவரது இடைநீக்கத்தை உறுதிபடுத்த வேண்டிய அவசியமில்லை. அவர் தாமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படுவார். காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு இடைநீக்கத்தை தொடர அரசு விரும்பினால் அப்போதுதான் இடைநீக்கத்தை உறுதிபடுத்த வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

The post ஐஏஎஸ், ஐபிஎஸ் இடைநீக்கம் ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: