2வது பாதியில் 46வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். தொடர்ந்து 55வது நிமிடத்தில் சாங்டே கோல் அடித்தார். முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பிபா தரவரிசையில் 99வது இடத்தில் உள்ள லெபனானை 101வது இடத்தில் உள்ள இந்தியா வீழ்த்தியதால் தரவரிசையில் 100க்குள் நுழைந்துள்ளது. இதனிடையே வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளார்.
The post இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து; சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு: ஒடிசா முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.
