“கட்சி நடவடிக்கைகளை கவனிக்கவே பழனிசாமி தேர்வு”: ஐகோர்ட்டில் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதம்

சென்னை: நிரந்தர பொதுச்செயலர் தேர்வாகும் வரை கட்சி நடவடிக்கைகளை கவனிக்கவே இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டு வருகிறார். கடந்த 1972 முதல் 2017 வரை இருந்து வந்த பொதுச் செயலாளர் பதவியை தற்போது மீண்டும் கொண்டு வந்துள்ளோம். 2017 வரை பொதுச்செயலாளராக போட்டியிட உறுப்பினராக இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. தற்போது அடிமட்டத்தில் செல்வாக்கு பெற்றவர்கள் பொதுச்செயலர் தேர்தலில் போட்டியிட முடியும் என கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது என்று வாதிடப்பட்டது.

The post “கட்சி நடவடிக்கைகளை கவனிக்கவே பழனிசாமி தேர்வு”: ஐகோர்ட்டில் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதம் appeared first on Dinakaran.

Related Stories: