கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார் கோயில் வைகாசி பொங்கல் விழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஊராட்சி மன்றத்தலைவர் வீரபாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். வடமாடு மஞ்சுவிரட்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை கிராம ஊரணியின் மைதானத்தின் நடுவில் உரல் புதைத்து அதில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக, மைதானத்தில் கயிறு கட்டி அவிழ்க்கபட்டது.

இதில் 13 காளைகள் விடப்பட்டன. ஒவ்வொரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கபட்டன. இந்த காளைகளை அடக்க 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவிற்கு மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்திருந்தன.பிடிபடாத, வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.

The post கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு appeared first on Dinakaran.

Related Stories: