நாய் கடித்து 15 பேர் காயம்

வருசநாடு: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நாய் கடித்து சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கடமலைக்குண்டு அருகே ஆழந்தளிர் மற்றும் குமணன்தொழு கிராமத்தில் சாலையில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று விரட்டி, விரட்டி கடித்ததில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நாய்கடிக்கான ஊசிகளை தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் வந்து செலுத்திக் கொள்ளும்படி மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. கடமலைக்குண்டு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post நாய் கடித்து 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: