வெயில் தாக்கம்… வரத்து குறைவு எதிரொலி; கோயம்பேடு மார்க்கெட்டில் எலுமிச்சை விலை உயர்ந்தது: பீன்ஸ், பூண்டு விலையும் பல மடங்கு உயர்வு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகராஷ்டிரா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகளும் வருகின்றன. இந்த நிலையில், வரத்து குறைவு மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் 50 ரூபாயில் இருந்து 180 க்கும் பூண்டு 150 லிருந்து 350 க்கும் எலுமிச்சை பழம் 70 லிருந்து 190 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாயில் இருந்து 30 க்கும் நவீன் தக்காளி 20 லிருந்து 40 க்கும் பீன்ஸ் 50 லிருந்து 180 க்கும் பீட்ரூட் 25 லிருந்து 50க்கும் முள்ளங்கி 15ல் இருந்து 30 க்கும் சவ்சவ் 30ல் இருந்து 50 க்கும் முட்டைகோஸ் 15 ல் இருந்து 30க்கும் வெண்டைக்காய் 20ல் இருந்து 40 க்கும் கத்தரிக்காய் 10 இருந்து 30 க்கும் காராமணி 15 இருந்து 30 க்கும் புடலங்காய் 15 இருந்து 40 க்கும் சுரக்காய் 10 இருந்து 20க்கும் சேனைக்கிழங்கு 30 இருந்து 65 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல் முருங்கைக்காய் 15 ல் இருந்து 30 க்கும் சேம கிழங்கு 20 இருந்து 40 க்கும் வெள்ளரிக்காய் 15 இருந்து 40 க்கும் பச்சை மிளகாய் 50 இருந்து 100 க்கும் அவரக்காய் 40 இருந்து 60க்கும் பட்டாணி 80 இருந்து 150 க்கும் பீர்க்கங்காய் 20 இருந்து 40 க்கும் நூக்கல் 15 இருந்து 40 க்கும் கோவக்காய் 10 இருந்து 30க்கும் கொத்தவரங்காய் 10 இருந்து 30 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.“வரத்து குறைவு மற்றும் வெயிலின் தாக்கத்தால் பீன்ஸ், பூண்டு, எலுமிச்சம் பழம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த மாதம் முழுவதும் விலை உயர்வு நீடிக்கும்’’ என்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறினார்.

The post வெயில் தாக்கம்… வரத்து குறைவு எதிரொலி; கோயம்பேடு மார்க்கெட்டில் எலுமிச்சை விலை உயர்ந்தது: பீன்ஸ், பூண்டு விலையும் பல மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: