தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-ம் தேதி தொடங்கியது. இதுவரை 1,00,699 பதிவு செய்துள்ளனர்.
இதில் 56,044 மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியும், 27,755 மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பதை பூர்த்தி செய்துள்ளனர்.
விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ம் தேதியுடன்நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 7 நாட்களில் ஒரு லட்சத்தை கடந்த பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு appeared first on Dinakaran.