மறுசுழற்சி பயன்பாட்டு மையம் திறப்பு

 

ஒட்டன்சத்திரம், மே 25: ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் நேற்று மறுசுழற்சி பயன்பாட்டு மையம் திறக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் ‘என் வாழ்க்கை என் சுத்தமான நகரம்,’ என்ற தலைப்பில் பொதுமக்களிடம் இருந்து பழைய பொருட்கள் பெறப்பட்டு, மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் நேற்று இந்த மையம் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் (பொ) சக்திவேல், மேலாளர் உமாகாந்தி, காசாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர் வேல்முருகன், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.வரும் ஜூன் 5ம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய, மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணிகள், செருப்புகள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், புத்தகங்கள் ஆகியவற்றை இந்த மையத்தில் வழங்கலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post மறுசுழற்சி பயன்பாட்டு மையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: