இதையடுத்து, கடும் போராட்டமாக அமைந்த 3வது செட்டை 21-18 என கைப்பற்றிய சிந்து 2-1 என்ற செட்களில் வென்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 2 நிமிடங்களுக்கு நீடித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் (30வயது, 23வது ரேங்க்), முதல் சுற்றில் 21-12, 21-16 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் டோமா பாபோவை (24வயது, 28வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 37 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
The post மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் 2வது சுற்றில் சிந்து appeared first on Dinakaran.