மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் 2வது சுற்றில் சிந்து

கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார்.முதல் சுற்றில் டென்மார்க் வீராங்கனை லின் கிறிஸ்டோபர்சனுடன் (23வயது, 33வது ரேங்க்) மோதிய சிந்து (27வயது, 13வது ரேங்க்), முதல் செட்டை 21-12 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். 2வது செட்டை லின் 21-17 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது.

இதையடுத்து, கடும் போராட்டமாக அமைந்த 3வது செட்டை 21-18 என கைப்பற்றிய சிந்து 2-1 என்ற செட்களில் வென்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 2 நிமிடங்களுக்கு நீடித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் (30வயது, 23வது ரேங்க்), முதல் சுற்றில் 21-12, 21-16 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் டோமா பாபோவை (24வயது, 28வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 37 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

The post மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் 2வது சுற்றில் சிந்து appeared first on Dinakaran.

Related Stories: