அரசியலில் என்னைப்போன்ற எளியவர்கள் வெற்றி பெற காங்.தான் காரணம்: கார்கே உருக்கம்

ஐதராபாத்: அரசியலில் என்னைப்போன்ற எளியவர்கள் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று கார்கே உருக்கமாக பேசினார். தெலங்கானாவில் உள்ள மஞ்சேரியலில் நடந்த ஜெய் பாரத் சத்தியாகிரக சபாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘‘மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் என்னை போன்ற ஏழைகளை ஊக்குவிக்காமல் இருந்திருந்தால் நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்க மாட்டேன்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பணியாற்றுவதற்கு சோனியாகாந்தி எனக்கு வாய்ப்பு அளித்து இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொதுத்துறையை நலிவடைய செய்துவிட்டது. வாக்குறுதி அளித்தபடி கோடிக்கணக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கவில்லை” என்றார்.

The post அரசியலில் என்னைப்போன்ற எளியவர்கள் வெற்றி பெற காங்.தான் காரணம்: கார்கே உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: