387 கோயில்களில் திருப்பணி மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், 11ம் தேதியும் நேற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், காரணீஸ்வரர் கோயில், விருதுநகர் மாவட்டம், குப்பாம்பட்டி இருளப்பசாமி கோயில், கரூர் மாவட்டம் ஆதிரெட்டிபாளையம் பாலமுருகன் கோயில், திருப்பூர் மாவட்டம் பூலாங்கிணறு முத்தாலம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் சாலவாக்கம் அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட 188 கோயில்களில் திருப்பணிகள் தொடங்கவும், நேற்று விடையல்கருப்பூர் அருணாச்சலேஸ்வரர் கோயில், ரெங்கநாதபுரம் ஜம்புநாதசுவாமி கோயில், திருத்துறைப்பூண்டி சித்தி விநாயகர் கோயில், கிளாக்காடு மாரியம்மன் கோயில், நாகப்பட்டினம் மாவட்டம் கோயில்கண்ணாப்பூர் நடுதறிநாதர் கோயில், உள்ளிட்ட 199 கோயில்கள் என மொத்தம் 387 கோயில்களுக்கு திருப்பணி தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

The post 387 கோயில்களில் திருப்பணி மாநில வல்லுநர் குழு ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: