ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூரில் நூதன முறையில் உளவுத்துறை போலீஸ் என கூறி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரிடம் ரூ.7 லட்சத்தை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவனை தேடி வருகின்றனர். சென்னை, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (38). இவரும், திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சபரீஷ் (37) ஆகிய இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத்குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டு, நான் உளவுத்துறை அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன். நீங்கள் செங்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவதாக உங்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் எங்களுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளான். மேலும், உங்கள் மீது வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமென்றால், எனக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என சம்பத்குமார் மிரட்டி உள்ளார். இதனால், பயந்துபோன சம்பத் ரூ.7 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.