அந்தியூர், ஜூலை 27: அந்தியூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி விஏஓ அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது பொய்யேரிகரை பகுதி. இதில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஓராண்டாக வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இதுவரையிலும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.