பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

கோவை, மே 18: கோவை கணபதி சங்கனூர் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). பழைய இரும்பு வியாபாரி. இவர் சம்பவத்தன்று இரவு பைக்கில் ரத்தினபுரி ஜீவானந்தம் ரோடு 7வது தெருகில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள் திடீரென செந்தில்குமாரின் மனைவியின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து செல்ல முயன்றனர். ஆனால் அவர் நகையை விடாமல் பற்றி கொண்டார். இது குறித்து செந்தில்குமார் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: