சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாய தென் மண்டல அமர்வில் செங்கல்பட்டு மாவட்டம் படூர் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் மெய்யப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், படூர் கிராமத்தில் மழைநீர் சேமிப்பு பகுதியாக உள்ள கழுவேலி நிலம் மற்றும் மயானம் அமைந்துள்ள பகுதிகளில் தனியார் மட்டுமின்றி, படூர் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பையும் கொட்டப்படுகிறது. டேங்கர் லாரிகளால் சுற்றுவட்டார பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுநீர் முழுவதும் கொட்டப்படுகிறது. இதனால் படூர் முதல் முட்டுக்காடு வரை உள்ள நீர்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் தண்ணீர் பாதிக்கப்படுவதால் சுற்றுவட்டார கிராமங்களின் நீராதரமும், நீர்நிலையில் உள்ள உயிரினங்களும் பாதிக்கப்படுன்றன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கடந்த மார்ச் 24ம் தேதி அளித்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டு இருந்தது.