மழை வேண்டி பெருவேள்வி உடல்பருமன் அறுவை சிகிச்சை சங்க தலைவராக ஜெம் மருத்துவமனை மருத்துவர் தேர்வு

கோவை, ஏப்.22: உடல்பருமன் அறுவைசிகிச்சை சொசைட்டி ஆப் இந்தியாவின் தலைவராக கோவை ஜெம் மருத்துவமனையின் பேரியாட்டிரிக்(உடல் பருமன்) அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர். பிரவீன் ராஜ்  தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னிந்தியாவில் இருந்து இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.  டாக்டர். பிரவீன் ராஜ் தலைவராவதற்கு முன்பு இரண்டு முறை நிர்வாக குழு உறுப்பினராகவும், சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் 2022ம் ஆண்டு முதல் 2024 வரை இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் தொடருவார். பெங்களூரில் நடைபெற்ற சங்கத்தின் ஆண்டு விழா மாநாட்டின் போது டாக்டர். பிரவீன் ராஜ்  இந்த பதவியை ஏற்றுக் கொண்டார்.

டாக்டர். பிரவீன்ராஜ், ஒரு முன்னோடி பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் பல சர்வதேச புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் உலகம் முழுவதும் பிரபலமான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை துறையில் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் இந்தியா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளில் இருந்து வந்த 250-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க ஓஎஸ்எஸ்ஐ மெய்நிகர் அகாடமியையும் நிறுவியுள்ளார்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.