அட்டப்பாடி,தாவளம், முள்ளி, மஞ்சூர் மலைப்பாதையில் வாகன போக்குவரத்திற்கு தமிழக வனத்துறை தடை

பாலக்காடு,பிப்.26: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி தாவளம், முள்ளி, மஞ்சூர் மலைப்பாதையில் வாகன போக்குவரத்திற்கு தமிழக வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் கேரளாவிலிருந்து அட்டப்பாடி தாவளம், முள்ளி, மஞ்சூர் வழியாக ஊட்டி செல்ல தமிழக வனத்துறை தடை விதித்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர்,காசர்கோடு,கோழிக்கோடு,மலப்புரம் மற்றும் பாலக்காடு  ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மன்னார்க்காடு தாலுகாஅட்டப்பாடி தாவளம்  முள்ளி வழியாக தமிழகம் மஞ்சூர் வழியாக குன்னூர் சென்று ஊட்டி சென்று வருகின்றனர். தற்போது திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஊட்டி செல்கின்ற கேரள மாநில அரசு பதிவெண் கொண்ட வாகனங்கள் சோதனைச்சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

கேரள வாகனங்கள் முள்ளி சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.  இதுகுறித்து கோவை மாவட்ட வனஅலுவலர் (டி.எப்.ஓ.,) அசோக்குமார் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இவ்வழித்தடத்தில். காட்டு யானைகள் உட்பட வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த  பகுதியாகும். வனவிலங்குகள் தற்போது கோடைசீசன் துவங்கியுள்ளதால் தண்ணீர் தேடி பவானி நதி, சிறுவாணி நதி ஆகிய இடங்களுக்கு தண்ணீர் தேடி இடம் பெயர்ந்துவாறு உள்ளது. இதனால் இரவு  பகல் இவ்வழித்தடத்தில் வாகன போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது  சுற்றுலாப்பயணிகளால் அதிகளவு வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், ஏற்படாமல் தடுக்க தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு இவ்வழியாக சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் மக்கள் வந்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.