பரமக்குடி அருகே களரி உற்சவத்தில் மஞ்சள் பூசும் திருவிழா

பரமக்குடி, பிப்.22:  பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் கருமலையான் கோவிலில் களரி உற்சவ விழாவினையொட்டி மஞ்சள் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் கருமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி களரி உற்சவ விழா நடைபெறும். அதையொட்டி நேற்று, கருமலையான் முனியப்பசாமி பாப்பாத்தி ஆகிய சுவாமிகள் கோயிலில் இருந்து புறப்பட்டு, கிராமம் முழுவதும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு மஞ்சள் பூசி அருள்வாக்கு கொடுத்தனர்.

முன்னதாக, கருமலையான் கோவிலில் கருங்குட்டி, செங்குட்டி, கரும்பு குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் நேர்த்திக்கடனாக பொங்கல் வைத்து கிடா வெட்டியும், கரும்பாலை தொட்டிகள் எடுத்தும் சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற்றனர்.

சுவாமிகள் வீதி உலா வந்த போது பெண்கள் மஞ்சள் பூசும் நிழ்வுகள் நடைபெற்றது. மேலும், சாமிக்கு மஞ்சள் தண்ணீர் கரைத்து ஊற்றியும், தேங்காய் உடைத்தும் சுவாமியை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன்,அரியனேந்தல் கிராமத் தலைவர் ராமு, செயலாளர் சௌந்தரபாண்டியன், பொருளாளர் சிவகுமார், நிர்வாகிகள் கருணாகரன், கலைபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தராஜன், மலைராஜ், ராமசாமி, கோபால் உள்பட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.