சின்னவீரம்பட்டியில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை

உடுமலை:  உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டி ஊராட்சியில் நமக்கு நாமே  திட்டத்தில் ரூ.45 லட்சம் செலவில், ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடம்  அமைத்தல், 15வது மானிய குழு நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் தார் சாலை  அமைத்தல், ரூ.9 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு  அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் எம்பி சண்முகசுந்தரம்,  முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன், உடுமலை  கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர்  செல்வராஜ், ஒன்றிய குழு தலைவர்  மகாலட்சுமி முருகன், துணைத்தலைவர் சண்முகடிவேலு, சின்னவீரம்பட்டி ஊராட்சி  தலைவர் கலாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் சுப்பிரமணி, மாவட்ட  கவுன்சிலர் மலர்விழி பாபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: