ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு, பயிற்சி மருத்துவர்கள், இறுதியாண்டு முதுகலை பட்டதாரிகள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் வாழ்வில் மேம்பட, வேலை வாய்ப்புகள் குறித்து வழிகாட்ட கல்லூரி வளாக வேலைவாய்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் சார்பில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நேற்று முன்தினம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில், கல்லூரி தாளாளர் டாக்டர் ரமேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.கார்த்திகா கண்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில், 10க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், பல் மருத்துவ நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டு எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் நடத்தியதில் கலந்துகொண்ட 150 மாணவ - மாணவிகளில் 98 மாணவ - மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ - மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: