அந்தியூர், டிச. 21: அந்தியூரில் திமுக எம்எல்ஏ ஏ.ஜி வெங்கடாசலம் முன்னிலையில், அந்தியூர் தேமுதிக நகர செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராஜேஷ், வார்டு கழக செயலாளர்கள் மக்கள் பாலகிருஷ்ணன், முருகன் மற்றும் நகரப் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன், கோவிந்தராஜ், சாதிக், சிவகுமார், சின்னசாமி, சேக்தாவூத், ரசூல், நாசர், கணேசன், கார்த்திக், மூங்கில்பட்டி அருண் ஆகியோர் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.