குளித்தலை, டிச. 18: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர் மலைக்கு அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புரதான கோவிலான சிவாயம் சிவபுரீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா வரும் 20ம் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இத்திருக்கோவிலில் உள்ள நடராஜ பெருமான் பேரழகு உடையவர். இவருடைய ஆருத்ரா தரிசன காட்சி கண்கொள்ளா காட்சியாகும். சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்க இயலாதவர்கள் இங்கு வந்து தரிசித்து பலனை பெறலாம் என்பது ஐதீகம். விழாவினையொடடி 20ம் தேதி காலை 6 மணிக்கு மகா அபிஷேகமும், அதனை தொடர்ந்து ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி நாதஸ்வரக் கச்சேரிகள், தேவார திருமுறை இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது.