பாஜகவினர் 35 பேர் மீது வழக்கு பதிவு இளங்கோவன் உருவ பொம்மை எரிப்பு

குடியாத்தம், டிச.7: பாரதிய ஜனதா கட்சி, பிரதமர் நரேந்திர ேமாடி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை முன்னாள் ஒன்றிய அமைச்சர் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவதூறாக பேசி வருவதாக தெரிகிறது. இதனை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியினர் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இளங்கோவன் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து பாஜக வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ், நகர தலைவர் வாக்கிஸ்வரன் உள்ளிட்ட 35 பேர் மீது குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களை கைது செய்ய வலியுறுத்தி குடியாத்தம் நகர காங்கிரசை ேசர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் டவுன் போலீசில் ேநற்று மனு அளித்தனர்.

Related Stories: