வேலூர், டிச.6: வேலூரில் கத்தியை காட்டி ₹3 ஆயிரம் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை கைது செய்த போலீசார், பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் நேற்று காலை தோட்டப்பாளையம் எல்ஐசி காலனி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி, நாகராஜ் என்கிற முசல்நாகராஜ்(40) என்பவர் வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, ‘நான் ரவுடி ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் ஜெயிலுக்கு போய் வந்துள்ளேன். என்னிடமா பணம் இல்லை என்று சொல்லுகிறாய்’ என்று கூறி இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த முயன்றுள்ளார். அப்போது பழனி ஒதுங்கிக்கொண்டதால் தப்பினார்.