செந்துறை மாவட்ட கல்வி அலுவலகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றம்

செந்துறை,டிச.3: செந்துறை மாவட்ட கல்வி அலுவலகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட கல்வி அலுவலம் கட்டிட வசதி, நிர்வாக வசதி காரணங்களால் உடையார்பாளையம் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முகப்பு கட்டிடத்தில் முதல் தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் புதிய அலுவலகத்தில் கோப்புக்களை சரி பார்க்க துவங்கினார். முன்னதாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆதிரை, உதவி தலைமையாசிரியர் மணிமேகலை, பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் தினகரன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Related Stories: