பெரம்பலூர் மாவட்டத்தில் 7,700 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சாய்வுதள வசதி

 

பெரம்பலூர்,மார்ச் 18: நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 7,700 பேர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை அழைத்துச் செல்ல உதவியாளரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 387 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,88,449 வாக்காளர்கள் உள்ளனர்

Related Stories: