பெரம்பலூர்,ஏப்.5: இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், உயிர்ப்பையும் நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி 17ம்தேதி தொடங்கியது. 40 நாட்கள் அனுசரிக்கப்பட்ட தவக்காலத்தில், புனித வாரத்தின் மிக முக்கிய நாளான 2ம்தேதி இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் நீத்ததை நினைவுகூறும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து மரித்த இயேசு கிறிஸ்து 3ம் நாள் உயிர்த்து எழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகைக்கான கொண்டாட்டம், 3ம்தேதி இரவு முதல் தொடங்கியது. இரவு 11 மணிக்கு தொடங்கிய ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில், புத்தம் புதிய ஒளியை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு பிறகு, சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது.