பெரம்பலூர்,ஏப்.2: 3-வது முறையாக சேவை செய்ய மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என்று வாக்காளர்களிடம் அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் வேண்டுகோள் விடுத்தார்.பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக இளம்பை தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இவர் நேற்று பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் கிராமத்தில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர் மத்தியில் அவர் பேசியதாவது:அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவித்து செயல் படுத்தப்பட்டுள்ளன. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.