சென்னை, ஏப்.1: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் நேற்று காலை எழும்பூர் பகுதியின் அல்லிக்குளம் அருகே வாக்கு சேகரித்தார். அப்போது அவரை மக்கள் வரவேற்றனர். அப்போது அவர்கள், “இந்த பகுதியில் பலர் நலமற்று வீடு இல்லாமல் சாலையோரங்களிலும், குடிசைகளிலும் வசித்து வருகிறோம். காலம் காலமாக வசிக்கும் எங்களுக்கு இதுவரை வீடு இல்லை,” என்று கூறினர். அதற்கு திமுக வேட்பாளர் இ.பரந்தாமன், “கண்டிப்பாக எனது வாக்குறுதியிலேயே அது உள்ளது. அதை நிச்சயம் செய்வேன். திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின், பல்வேறு நல திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக நமது சென்னை மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்.