பெரம்பலூர்,மார்ச் 29: உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வாருங்கள் என்று தமிழரின் பாரம்பரிய வழக்கப்படி தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களுக்கு கொடுத்து பெரம்பலூர் திமுக வேட்பாளர் பிரபாகரன் வாக்கு சேகரித்தார்.
பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக பிரபாகரன் போட்டிருக்கிறார். இதனையொட்டி திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தொடர்ந்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக நேற்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்குமாதவி சாலையில் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்தப் பகுதியில் வீடுவீடாக வாக்காளர்களிடம் சென்று ஏப்ரல் 6ம்தேதி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வாருங்கள் என தமிழரின் பாரம்பரிய வழக்கப்படி தட்டில் வெற்றிலை பாக்குவைத்து வாக்குகளை சேகரித்தார். அப்போது பொதுமக்களிடம் அவர் பேசியதாவது :