வாலாஜாபாத், மார்ச் 26: வாலாஜாபாத் பேரூராட்சி 4வது வார்டில், பயன்படாமல் உள்ள மினி மோட்டார் தண்ணீர் தொட்டியை அதிகாரிகள் சீரமைக்காமல் உள்ளதால், பொதுமக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் அலைகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சி 4வது வார்டு இந்திரா நகரில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சமுதாயக்கூடம் அருகில் ஒரு மினி மோட்டாருடன் கூடிய தண்ணீர் தொட்டி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இதையொட்டி, இப்பகுதி மக்கள், அங்கு குடிநீர் பிடித்து, பயனடைந்தனர்.இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த மினி மோட்டார் தண்ணீர் தொட்டி பழுதானது. இதனை சீரமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள், பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில் வாலாஜாபாத் இந்திராநகர் பகுதியில் உள்ள மினி மோட்டார் தண்ணீர் தொட்டி மூலம் இப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தோம். பேரூராட்சி மூலம் விநியோகிக்கப்படும் பாலாற்று குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டால். இந்த மினி மோட்டார் தண்ணீர் தொட்டியில் நீரை, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருவது வாடிக்கையாக இருந்தது.