வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை திருட்டு

ஈரோடு, மார்ச் 23:   ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர். ஈரோடு இடையன்காட்டு வலசு 3வது வீதியை சேர்ந்தவர் குமார் (60). இவர், சாலையோரம் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த 18ம் தேதி மாலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு அவரது கடைக்கு சென்றார். பின்னர், இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றபோது, பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. லாக்கரில் இருந்த ஒன்றரை பவுன் நகை திருடுபோயிருந்தது. இது குறித்து குமார், அளித்த புகாரின்பேரில் ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: