காஞ்சிபுரம், மார்ச் 17: காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டரங்கில் மீண்டும் நீச்சல் குளத்தில் விதிமுறைகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மற்றும் போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் விளையாட்டரங்கம் நீச்சல் குளத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மற்றும் போட்டிகள் நடத்துவதற்கும் விதிமுறைகளுடன், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது, நீச்சல் குள வளாகத்தில் சமூக இடைடிவளியுடன் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல், நீச்சல் குளத்தில் உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும்.