கார்-பைக் மோதல்; வடமாநில வாலிபர் பலி

ஈரோடு, மார்ச் 16: ஈரோட்டில் கார்-டூவீலர் மோதிய விபத்தில் வடமாநில வாலிபர் பரிதாபமாக பலியானார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மெகாப்கான் (30). இவர் மற்றும் இவரது தம்பி  அதாப்கான் (27) இருவரும் ஈரோட்டில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.  இவர்கள் மெகாப்கான், அதாப்கான் இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். ஈரோடு வேப்பம்பாளையம் பிரிவில் திரும்ப முயன்றபோது, ஈரோட்டில் இருந்து பெருந்துறை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது  மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த மெகாப்கான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த அதாப்கானை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: