ஈரோடு, ஜூலை 24: நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி அனுமதியின்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 6 பெண்கள் உட்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் தாக்கிய போலீசாரை கண்டித்தும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் ஈரோட்டில் 2வது நாளாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடந்தது.
