இன்ஸ்டா காதலியை எரித்து கொன்ற கள்ளக்காதலன் கரூரில் இருந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

 

ஈரோடு, ஆக.1: ஈரோடு மூலப்பாளையம் பாரதி நகர் 3வது வீதியை சேர்ந்த சென்னப்பன் மகள் வினோதினி (24). கடந்த 5 ஆண்டுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தை பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்க்கும் சூர்யா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு தனிஷ், (4). என்ற மகன் உள்ளார்.
வினோதினி திருப்பூரில் இருந்த போது இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடி அரண்மனை தெருவை சேர்ந்த மாரிமுத்து மகனான செல்போன் சிம் கார்டு விற்பனை செய்யும் நவீன் என்ற நவநீதிகிருஷ்ணன் (26) என்பவர் பழக்கமானார். வினோதினிக்கும், சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரை பிரிந்து 2 ஆண்டுகள் ஆகிறது. மகனுடன் பெற்றோர் வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வினோதினி வசித்தார்.

 

Related Stories: