கோவை, மே 15: கோவை பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. இதன் காரணமாக ஆவாரம்பாளையம், கணேஷ்நகர், காமதேனு நகர், நவ இந்தியா, கணபதி பஸ் நிறுத்தம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம் மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, மின்மயானம், பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் பகுதி, காந்திமாநகர் ஒரு பகுதி ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
*சாய்பாபாகாலனி, காந்திபுரத்தில் நாளை மின்தடை
கோவை டாடபாத் துணை மின் நிலையத்தில் மின் பாராமரிப்பு பணிகள் நாளை(16ம் தேதி) நடக்கிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு, நாராயண குரு ரோடு, சாய்பாபாகோயில், மனையியல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், என்எஸ்ஆர் சாலை, பாரதி பார்க் 1 முதல் 3 வரை, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான் பகதூர் சாலை, பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபுள்யு மில்ஸ், ராம்நகர், அவினாசி ரோடு, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர், ஆவாரம்பாளையம் பகுதி டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, அட்கோ காலனி, அலமு நகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஆதித்தன் தெரிவித்துள்ளார்.
