சென்னைக்கு 5 மாதம் நீர் இருப்பு கிருஷ்ணா நீர் வரத்து 10 நாளில் தொடங்கும்

 

சென்னை: கிருஷ்ணா நதியில் இருந்து நீர் விநியோகம் மே மாத இடையில் மீண்டும் தொடங்கும். தற்போது சென்னை நகருக்கான நீர் இருப்பு சீராக உள்ளது. மழை பெய்யாவிட்டாலும் சென்னை நகரின் தினசரி விநியோகத்துக்கான சுமார் 1,246 மில்லியன் லிட்டரை குறைந்த பட்சம் 5 மாதங்களுக்கு தொடர முடியும். அந்த அளவுக்கு இருப்பு உள்ளது என்று சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு சற்று குறைந்துள்ளது. இதனிடையே கிருஷ்ணா நதியின் நீர் வரத்தை முன்னிட்டு நீர் நிலைகளை இணைக்கும் கால்வாய்களில் மேம்பாட்டுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவில் இருந்து மே மாதம் இரண்டாம் வாரத்தில், அதாவது இன்னும் ஏறக்குறைய 10 நாட்களில் நீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு சென்னை நகரின் நீர் இருப்பு நிலை சீராக உள்ளதாகவும், மழை பெய்யாவிட்டால் குறைந்த பட்சம் 5 மாதங்களுக்கு தினசரி நீர் விநியோகம் தொடரும் என்றும் சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சமீபத்திய புள்ளி விவரத்தின்படி செம்பரம்பாக்கம் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட 5 முக்கிய நீர்த் தேக்கங்களின் மொத்த நீர் இருப்பு 7,681 மில்லியன் கன அடியாக இருந்தது. இந்த அளவு அந்த நீர்த் தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் சுமார் 65.3% ஆகும். இது கடந்த ஆண்டின் மே தொடக்கத்தின் இதே நாளுடன் ஒப்பிடும்போது 62 மில்லியன் கன அடி. இருப்பினும் வீராணம் ஏரி தொடர்ந்து நீர் விநியோகத்தை நிறைவு செய்து வருகிறது. நீர் சேமிப்பு மட்டங்களை சமநிலைப்படுத்தவும், சென்னைக்கு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யவும் கிருஷ்ணா நீர் வழங்கல் அவசியமாக இருந்தது.

இதற்கிடையே, ஆந்திராவின் எல்லையில் உள்ள கண்டலேறு – பூண்டி கால்வாயில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள ஆந்திர மாநில அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் கண்டலேறு நீர்த் தேக்கத்தில் இருந்து பூண்டிக்கு வரும் நீரை நிறுத்தி வைத்திருந்தனர். பராமரிப்பு பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தின் தேவைகளை நீர்த் தேவையை பூர்த்தி செய்த பிறகே கிருஷ்ணா நீர் மே மாத இரண்டாம் வாரத்தில் சென்னை எல்லைக்குள் வரும் வாய்ப்புள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்க நீர் சேமிப்பை அதிகரிக்க, இந்த கால கட்டத்தில் சென்னை நகருக்கு சுமார் குறைந்தபட்சம் 3 ஆயிரம் மில்லியன் கன அடி கிருஷ்ணாநீர் வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: