காலமுறை ஊதியம் வழங்க கோரி பெரம்பலூரில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,பிப்.25: கால முறை ஊதியம் வழங்கக் கோரி பெரம்பலூரில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காலமுறை ஊதியம் பெறு வது, சிபிஎஸ் ஒழித்து, பழைய ஓய்வூதியம் பெறு வது, பதவி உயர்வு பத்தா ண்டு என்பதை ஆறு ஆண் டு எனபெறுவது, அலுவலக உதவியாளர் 10சதவீதம், கிராம நிர்வாக அலுவலர் 20 சதவீதம் என்பதை 50 சதவீதமாக பெறுவது என் ற 4 அம்சக் கோரிக்கைக ளை வலியுறுத்தி பெரம்ப லூர் தாலுக்கா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார்.வட்ட செயலாளர் சுசீலா, வட்டப் பொருளாளர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம உதவியாளர்கள் பலரும் கலந்துகொண்டு 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறு த்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: